கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 16.02.2014 ) அன்று நமது திருப்பூர் இயற்கை கழக நண்பர்கள் குழு, செயலாளரின் வேண்டுகோளின் படி மாபெரும் பறவை கணக்கு பதிவிற்காக ( NILGIRIS BIG BIRD DAY ) வன ஆர்வலரும் முதுபெரும் கானுயிர் புகைப்பட கலைஞருமான நஞ்சன் தருமன் அவர்களின் குழுவுடன் சேர்ந்து பணியாற்றியது.
குழு நண்பர்கள் : கோபாலகிருஷ்ணன், நல்லசிவன், செந்தில், ராஜ்குமார், பாலக்ருஷ்ணன், லதீஷ் ,முருகவேல், காளீஸ்வரன் மற்றும் ஹரிஷ்.

மேலும் பல பறவையினங்களை பார்த்து பதிவு செய்து விட்டு 11 மணியளவில் திருப்பூருக்கு திரும்ப எத்தனித்தோம். நஞ்சன் தருமன் அவர்கள் எங்களை வண்டி நிறுத்துமிடத்திற்கே வந்து வழியனுப்பினார். அவரிடம் நாங்கள் ரசித்தது .. மிகுந்த பொறுமை, ஒரு பறவைக்காக நீண்ட நேரம் காத்திருத்தல், அன்பான வழிநடத்தல் ,சப்தங்களை கூர்ந்து கேட்பது ,மிகவும் அமைதியாக சலனமில்லாமல் அமர்ந்திருப்பது ,காட்டின் வழித்தடத்தை உன்னிப்பாக கவனத்தில் கொள்வது போன்றவற்றை கற்றுக்கொண்டோம் .